இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கப்பட்டது.
சாலை துண்டிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளைச் சீரமைக்க மூன்று நாள்கள் எடுக்குமென்பதால் பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறு அம்மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.