விமானப் பயணியிடமிருந்து 10 அனகோண்டா பாம்புகள் பறிமுதல்: ஒருவர் கைது

பெங்களூரு: பெங்களூரு கெம்பேகவுடா அனைத்துலக விமானநிலையத்தில் வந்திறங்கிய விமானப் பயணியிடமிருந்து 10 அனகோண்டா பாம்புகளை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பேங்காக்கில் இருந்து வந்திறங்கிய விமானப் பயணிகளின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பயணியின் பையில் இருந்து ஏதோ நெளிவதுபோல் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக அவரது கைப்பையை வாங்கித் திறந்து பார்த்தபோது, அதில் 10 மஞ்சள் நிற அனகோண்டாக்கள் இருந்தன. இதையடுத்து பாம்புகளைக் கடத்தி வந்தவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், “வனவிலங்கு கடத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாது, வனத்துறை அதை அனுமதிக்காது, பாம்புகளைத் கடத்துவது பெருங்குற்றம்,” என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!