திருப்பதி: தெலுங்கானா மாநிலம் சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).
இவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபாட்டிற்காகச் சென்றார்.
வழிபாடு முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார் ராமுலம்மா. சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலைப்பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.
அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் காவல் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற காவல்துறை அதிகாரி மூதாட்டியின் நிலையைப் பார்த்து உதவி செய்ய முடிவெடுத்தார்.
மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார் அந்த காவல்துறை அதிகாரி.
காவல்துறை அதிகாரி மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை மலையில் இருந்த சிலர் காணொளி எடுத்தனர். பின்னர் அதை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டனர்.
காவல்துறை அதிகாரியின் மனிதாபிமானத்தை பார்த்த மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் சமூக ஊடகங்கள் வழி அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.