மூதாட்டியை முதுகில் சுமந்து சென்ற காவல்துறை அதிகாரி

திருப்பதி: தெலுங்கானா மாநிலம் சாலேஸ்வரம் நல்ல மலையை சேர்ந்தவர் ராமுலம்மா (வயது 75).

இவர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) சாலேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலில் வழிபாட்டிற்காகச் சென்றார்.

வழிபாடு முடிந்து வீட்டிற்கு செல்ல மலைப்பாதையில் நடந்து வந்தார் ராமுலம்மா. சிறிது தூரத்திற்கு மேல் அவரால் மலைப்பாதையில் ஏறி செல்ல முடியவில்லை.

அந்த வழியாக வந்த சாலேஸ்வரம் காவல் நிலையத்தில் வேலை செய்யும் ராமதாஸ் என்ற காவல்துறை அதிகாரி மூதாட்டியின் நிலையைப் பார்த்து உதவி செய்ய முடிவெடுத்தார்.

மூதாட்டியை தனது தோளில் சுமந்து சென்று அவரது வீட்டில் விட்டார் அந்த காவல்துறை அதிகாரி.

காவல்துறை அதிகாரி மூதாட்டியை தோளில் சுமந்து செல்வதை மலையில் இருந்த சிலர் காணொளி எடுத்தனர். பின்னர் அதை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டனர்.

காவல்துறை அதிகாரியின் மனிதாபிமானத்தை பார்த்த மற்ற அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் சமூக ஊடகங்கள் வழி அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!