ஒரே தொகுதியில் 114 பேர் மனுத் தாக்கல்

மல்காஜ்கிரி: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

அதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 18-ந் தேதி தொடங்கியது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான வியாழக்கிழமை (ஏப்ரல் 25) ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட உள்ளன.

வருகிற 29ஆம் தேதிக்குள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 29ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!