மோடி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், அதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று கூறி, ஆனந்த் எஸ் ஜோந்தலே என்ற வழக்கறிஞர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

“பிரதமர் மோடி, ஏப்ரல் 9ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தில் இந்து, சீக்கிய கடவுள்கள் பெயரால் வாக்கு கேட்டார். முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் விமர்சனம் செய்தார். பிரதமரின் இந்த பேச்சு நாட்டின் ஒற்றுமையை கெடுக்கும்,” என்று ஆனந்த் தமது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. நீதிபதி சச்சின் தத்தா வழக்கு விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதி தத்தா வேறு சில முக்கிய வேலைகளில் இருந்ததால் இந்த வழக்கை திங்கட்கிழமை (ஏப்ரல் 29) விசாரிப்பார் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!