ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை; 20 கோடி பறிமுதல்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சரின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக ஆலம்கிர் ஆலம் பதவி வகிக்கிறார். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் திங்கட்கிழமையன்று ( மே 6) அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சஞ்சீவ் லாலின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள காணொளிக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராமப்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் வீரேந்திர ராம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து நாள்கள் விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!