அனுமரை நீதிமன்றத்துக்கு இழுத்தவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

புதுடெல்லி: தனியார் நிலத்தில் உள்ள கோவில் தொடர்பான வழக்கில் ஆஞ்சநேயரையும் மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உள்ளது.

டடெல்லி உத்தம் நகர் பகுதியில், தனியார் நிலத்தில் கட்டப்பட்ட கோவில் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்த அங்கித் மிஸ்ரா, 31, கோவில் பொது மக்களுக்குச் சொந்தமானது என்பதால், இந்த நிலம் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.

சுராஜ் மாலிக் என்பவர் கட்டிய அந்தக் கோயில் பொது வழிபாட்டிடமாக இருப்பதால், மாலிக்கின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம்,கோவிலுக்குள் அவ்வப்போது பொதுமக்களை அனுமதிப்பது அதன் தனிப்பட்ட தன்மையை மாற்றாது என்று நீதிமன்றம் கூறியது.

மனுதாரரின் இந்தச் செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக்கூடியது.மோசமான, தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!