அமராவதி: ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் வன்முறையில் ஈடுபட்டுவருவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே அரசு, தனியார் சொத்துகள் அழிக்கப்படுவதாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் கல்லூரியின் பெயர் பலகை உடைக்கப்பட்ட காட்சிகள் வெளியான நிலையில் திரு ஜெகன்மோகன் ரெட்டி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், “ஆளுங்கட்சியின் அழுத்தங்களோடு காவல்துறை மந்தமாகிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக வலுவாக இருந்த அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது,” என்றார் ஜெகன்.
“ஆளுநர் உடனடியாக தலையிட்டு பசுமைவாதிகளின் அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள், உடைமைகள் மற்றும் அரசு உடைமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தெலுங்கு தேசம் கட்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்வலர்களுடனும் சமூக ஊடகங்களுடன் நாங்கள் நிற்கிறோம்,” என்று ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.