ஒரே நாளில் இருமுறை பதவியேற்ற பாஜக அமைச்சரால் குழப்பம்

ஒரே நாளில் இருமுறை பதவியேற்ற பாஜக அமைச்சரால் குழப்பம்

1 mins read
57f06d84-5cc2-4bba-9759-a57dbd9d3880
பதவியேற்பின்போது, ராம்நிவாஸ் அமைச்சர் பதவியைத் தவறாகப் படித்ததால், ராம்நிவாஸ் இணையமைச்சரா அல்லது முழு அமைச்சரா என்ற குழப்பம் எழுந்தது. - படம்: இந்திய ஊடகம்

போபால்: பாஜக அமைச்சர் ராம்நிவாஸ் ராவத்தின் பதவியேற்பில் தவறான உச்சரிப்பால் குழப்பம் ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த ராம்நிவாஸ் ராவத், திங்கட்கிழமை காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராகப் பதவியேற்றிருந்தார். ஆனால், பதவியேற்பின்போது, ராம்நிவாஸ் அமைச்சர் பதவியைத் தவறாகப் படித்ததால், ராம்நிவாஸ் இணையமைச்சரா அல்லது முழு அமைச்சரா என்ற குழப்பம் எழுந்தது.

இதனையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில், ராம்நிவாஸ் மீண்டும் முழு அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ராம்நிவாசுக்கு முதல்வர் மோகன் யாதவ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம், ராம்நிவாஸ் ஒரேநாளில் இரண்டு முறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், ராம்நிவாஸ் காங்கிரசில் இருந்து பாஜகவில் கடந்த ஏப்ரல் மாதம் இணைந்தார். இருப்பினும், அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து இன்னும் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்