தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும் பராமரிப்புத் தொகை கோரலாம்

1 mins read
உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியது
0bcfa13f-d0f9-48ff-b180-6854909f58af
மணவிலக்கு பெற்ற பின்பு முஸ்லிம் பெண்களும் தங்கள் கணவன்மாரிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரலாம். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மணவிலக்கு பெற்ற முஸ்லிம் பெண்களும், தங்களின் முன்னாள் கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125ன் கீழ், முஸ்லிம் பெண்களும் இவ்வாறு பராமரிப்புத் தொகை கோரலாம் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தச் சமயத்தையும் பொருட்படுத்தாமல் அனைத்துப் பெண்களுக்கும் இச்சட்டப்பிரிவு பொருந்தும் என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்