நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஜூலை 23ஆம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதராமன், பொருளாதார வல்லுநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். தற்போது மீண்டும் 3வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 22ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடருக்கு பதிலாக நிதி நிலைக் கூட்டத் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் கூட்டத்தில், ஜூலை 23ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான முழு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யவுள்ளார்.
கூட்டத்தொடரின் முதல் நாள் ஜூலை 22ஆம் தேதி பொருளியல் ஆய்வறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறாா்.
இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது நிதிநிலை அறிக்கையாகும். மறைந்த பிரதமா் மொராஜி தேசாய் நிதியமைச்சாரகவும் இருந்து 6 முறை வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தாா்.