தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயநாட்டில் மின்கட்டணம் ரத்து

1 mins read
831162eb-752f-40c9-8bc4-ddfce867762b
நிலச்சரிவில் சிக்கிச் சிதையுண்ட வீடுகள். - படம்: இந்திய ஊடகம்

திருவனந்தபுரம்: கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் ஆறு மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட இரு பெரும் நிலச்சரிவுகள் நாட்டையே உலுக்கின.

நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி, பூஞ்சேரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் அடியோடு மண்ணில் புதைந்தன.

நிலச்சரிவுகளில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 9வது நாளாக புதன்கிழமையும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. இன்னும் 150 பேரைக் காணவில்லை. அவர்களின் சடலங்கள் கிடைக்கின்றனவா என்று மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மாநில மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 10 குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்