புதுச்சேரி: புதுச்சேரி புதிய டிஜிபி-யாக ஷாலினி சிங் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) பதவியேற்றார்.
புதுச்சேரி மாநில காவல்துறை டிஜிபி-யாக இருந்த ஸ்ரீனிவாஸ் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து டெல்லியில் பணியாற்றிய ஷாலினி சிங், புதுச்சேரி மாநில டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு புதுச்சேரி வந்த அவர், திங்கட்கிழமை காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி-யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னதாக காவல்துறை தலைமையக அலுவலக வளாகத்தில் ஷாலினி சிங்கிற்கு, அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
டிஜிபி-யாக பொறுப்பேற்ற ஷாலினி சிங்க், ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனையும் சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

