பாகிஸ்தானுக்கு உதவியதாக மாணவர் கைது

பாகிஸ்தானுக்கு உதவியதாக மாணவர் கைது

1 mins read
a5e54122-9218-4e8c-a5f3-232a9edb60f8
தில்லான், பாட்டியாலா ராணுவ முகாமின் படங்களையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.   - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

சண்டிகர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகவும், முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஹரியானாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஓரளவு அமைதி திரும்பியுள்ள நிலையில் ஹரியானா மாநிலத்தில் நடந்த இரண்டாவது கைது இதுவாகும்.

பாட்டியாலாவின் கல்சா கல்லூரியில் அரசியல் படிக்கும் தேவேந்திர சிங் தில்லான், 25, கடந்த வாரம் துப்பாக்கிகளின் படங்களைத் தனது ஃபேஸ்புக் கணக்கில் பதிவேற்றியதற்காகக் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், ​மாணவர் கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தானுக்குச் சென்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரியவந்தது.

தில்லான், பாட்டியாலா ராணுவ முகாமின் படங்களையும் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

இதேபோன்ற குற்றச்சாட்டில் பானிபட்டில் 24 வயதான நௌமன் இலாஹி சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

அதேபோல், டெல்லியில் உள்ள தூதரகத்தில் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் அதிகாரியுடன் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஒரு பெண் உட்பட இரண்டு பேரை பஞ்சாப் காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்