இந்தியாவில் 25,000 வேலைகளை உருவாக்கும் நிறுவனம்

‘ஆப்பிள்’ மின்னணுக் கருவிகளைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் முதற்கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யவுள்ளது.

இதன்மூலம் 25,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அம்மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப, மின்னணுவியல் மற்றும் தொடர்புத் துறைகளுக்கான அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார்.

‘கேடிஆர்’ என அழைக்கப்படும் அவர், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைநகர் ஹைதராபாத்தை ஒட்டி, ரங்க ரட்டி மாவட்டத்தில் கொங்கர் கலான் பகுதியில் ஃபாக்ஸ்கான் ஆலை நிறுவப்படும்.

புதிய ஆலை உலகத்தரம் வாய்ந்த பொருள்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக விளங்கும் என்றும் அந்த ஆலை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு மைல்கல் என்றும் தெலுங்கானா அரசாங்கமும் ஃபாக்ஸ்கான் நிறுவனமும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

உலகின் முன்னணி ஐஃபோன் தயாரிப்பாளராக ஃபாக்ஸ்கான் விளங்குகிறது. தைவானின் தைப்பே நகரில் அதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அதன் பெரும்பாலான ஆலைகள் சீனாவில் அமைந்துள்ளன.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றின்போது சீன அரசாங்கம் கடுமையான முடக்கநிலையை அறிவித்ததால் அங்குள்ள ஃபாக்ஸ்கான் ஆலைகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அத்துடன், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் போக்கும் அதிகரித்துள்ளதால் ஃபாக்ஸ்கான் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!