தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிவேணி சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை

2 mins read
6325b5d8-80bd-4792-acbe-6d6000a67ebd
பாஜக அரசு, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்கிறது. - படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்​ராஜில் இந்தியாவின் பல்வேறு மொழிகளை இணைக்​கும் பாலமாக பாஷா சங்கம் செயல்​படு​கிறது.

இச்சங்கத்தின் சார்​பில் திரு​வள்​ளுவர், பாரதி​யார், பாரதி​தாசன் எனப் பல தமிழ்க் கவிஞர்களுக்கு ஏற்கெனவே விழா எடுக்​கப்​பட்​டுள்​ளது.

பாஷா சங்கத்​தின் நிறு​வனரும் மறைந்த பொதுச் செயலா​ள​ருமான கிருஷ்ணசந்த் கவுடு, தமிழ் கற்ற​வர். திரு​வள்​ளுவர் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.

முதன்​முதலில் 1990ஆம் ஆண்டு, திரிவேணி சங்கமத்​தின் தென்கரைச் சாலைக்குத் திரு​வள்​ளுவர் பெயரைச் சூட்டி, அங்கு வள்ளுவருக்குச் சிலை வைக்கக் கோரினார் அவர்.

2009ஆம் ஆண்டில் தமிழரான எம்.கோ​விந்​த​ராஜன் இந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளரானார்.

திரு கவுடுக்குப் பிறகு தாங்கள் தொடர்ந்து வலியுறுத்​தி​ய​தால், அலகா​பாத் மாநக​ராட்சி 2011ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி நடத்திய கூட்​டத்​தில் சாலை​யின் பெயர் மற்றும் சிலைக்கு அனுமதி வழங்​கியதாக இந்து தமிழ் திசைக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறினார்.

மாநக​ராட்சி உத்தரவை 2017ல் பெற்​றதை அடுத்து அந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி திரு​வள்​ளுவர் பெயரைத் தென்கரைச் சாலைக்குச் சூட்டி விழா நடத்​தியதாக அவர் கூறினார். ஆனால் அந்த இடம் தங்கள் கட்டுப்​பாட்டுக்​குள் வருவதாகக் கூறி அலகா​பாத் வளர்ச்சி ஆணையம், சிலை வைக்கத் தடை விதித்​ததாகவும் தற்போது தடைகளை விலக்கி மாநில அரசே சிலை வைப்பதாகவும் அவர் சொன்னார்.

மாமல்​லபுரத்​தில் வாங்​கப்​பட்ட சிலை, ஜனவரி 12ஆம் தேதி பிரயாக்​ராஜ் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. பிரதமர் நரேந்திர மோடி மகா கும்​பமேளா​வுக்கு வரும்போது ​திரு​வள்​ளுவர் சிலையைத் ​திறந்​துவைப்​பார்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

குறிப்புச் சொற்கள்