தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வுபெற வேண்டும்: கார்கே

தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வுபெற வேண்டும்: கார்கே

1 mins read
0620fdaf-e858-4ebb-abdf-c75f31874e85
நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து காங்கிரஸ் தலைமை பேசியுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

குஜராத்: குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சிப் பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கார்கே பேசும்போது, “கட்சி அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும்.

“நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துகளைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும்,” என்றார்.

“கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்களும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்களும் ஓய்வெடுக்க வேண்டும்,” என்றும் திரு கார்கே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்