சபரிமலை கோவில் தங்கத்தைத் திருடியவர்கள் தப்ப முடியாது: அமைச்சர்

சபரிமலை கோவில் தங்கத்தைத் திருடியவர்கள் தப்ப முடியாது: அமைச்சர்

1 mins read
43794c17-2c97-4e1b-9c28-07bcf4c4cae7
கடந்த ஜனவரி மாதம் கோவிலின் தலைமை அர்ச்சகர் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார். - கோப்புப் படம்: லைவ் லா.இன்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சபரிமலைக் கோவில் தங்கத்தைத் திருடியவர்கள் தப்ப முடியாது என்று கேரள தேவஸ்​வம் துறை அமைச்​சர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கை விசாரித்த நீதிபதி பதருதீன், தமக்கு பிணையை ரத்து செய்வதில் விருப்பம் என்று வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.

தங்கம் திருடுபோனது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டார் கண்டரரு ராஜீவர்.

ஐம்பது நாள்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், கொல்லம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தங்கம் திருடுபோன காலகட்டத்தில் தலைமை அர்ச்சகராக இருந்தார் ராஜீவர் என்றும் அவருக்குப் பல்வேறு முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இருந்தது என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சபரிமலை தங்கம் திருடப்பட்ட விவகாரம், இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், ஐயப்​பன் கோவிலுக்குச் சொந்​த​மான தங்​கம் காணா​மல்போனது தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வின் அறிக்​கைக்​காக காத்​திருப்பதாக அமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.

அறிக்கை கிடைத்​தவுடன் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் உடனடி​யாகத் தொடங்​கும் என்றும் கடவுள் சொத்​தைக் கொள்​ளை​யடித்த எவரும் சட்​டத்​தின் பிடி​யில் இருந்து தப்ப முடி​யாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்