சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் மூவர் உயிரிழப்பு

1 mins read
ac0b2f0f-5f3b-4fb3-80d5-8390f024f004
பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். - படம்: இந்திய ஊடகம்

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர்.

சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்​தது. அதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப் படை​யினர் தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது மறைந்​திருந்த மாவோ​யிஸ்ட்​கள் துப்​பாக்​கி​யால் சுட்டு தாக்​குதல் நடத்த தொடங்கியதையடுத்து தற்​காப்​புக்​காக பாது​காப்​புப் படை​யினர் பதில் தாக்​குதல் நடத்​தினர்.

இரு தரப்​பினருக்​கும் இடையே நடந்த கடும் துப்​பாக்​கிச் சண்​டை​யில் 2 பெண்​கள் உள்பட 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர்.

குறிப்புச் சொற்கள்