மூன்று மாநில இடைத்தேர்தல்: கோட்டையை இழந்த பாஜக

மூன்று மாநில இடைத்தேர்தல்: கோட்டையை இழந்த பாஜக

2 mins read
1903df00-ffd2-4597-974f-079dacdddf50
பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர். - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜன் சுராஜ் கட்சிகள் வெற்றிபெற்றன.

பீகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவின் கோட்டையில் மாற்றம்

பங்கிப்பூர் தொகுதி கடந்த 31 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் வலுவான கோட்டையாக விளங்கி வந்தது. பாஜக தலைவர்களில் ஒருவரான நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானதைத் தொடர்ந்து, தனது எம்.எல்.ஏ. பதவியை விட்டு விலகியதால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

நேரடி அரசியலில் களம் இறங்கிய பிரசாந்த் கிஷோருக்கு இதுவே முதல் தேர்தல் வெற்றியாகும்.

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் நீண்டகாலக் கோட்டையை ஜன் சுராஜ் கட்சி கைப்பற்றியிருப்பது அம்மாநில அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

இத்தொகுதியில் குறைந்த அளவிலான வாக்குகளே (34%) பதிவாகியிருந்த போதிலும், இந்த வெற்றி வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) எண்ணப்பட்டன. சிங்கப்பூர் நேரம் இரவு 7.30 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் ஒரேயோர் தொகுதியில் மட்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவும் குஜராத்தில் ஒரு தொகுதிக்கு மட்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரசும் முன்னணியில் இருந்தன.

குறிப்புச் சொற்கள்
சட்டப்பேரவைத்இடைத்தேர்தல்பாஜககாங்கிரஸ்வாக்கு எண்ணிக்கைபீகார்குஜராத்மத்தியப் பிரதேசம்