தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தக்காளி விலை விரைவில் குறையும்

1 mins read
ff328c90-e3a1-4d20-b387-274b5ce7f62f
தக்காளி விலை உயர்வுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: தக்காளி விலை விரைவில் குறையும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாக சீராக இருந்து வந்த நிலையில், திடீரென நாடு முழுவதும் விலை அதிகரித்தது.

சில மாநிலங்களில் விலை 100 ரூபாயைக் கடந்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். ஹோட்டல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன.

குறிப்பாக, தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் தக்காளியின் விலை விரைவில் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி காரே கூறுகையில், “தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பருவமழை தாக்கம், பயிர் சேதம் மற்றும் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் வட மாநிலங்களிலும் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 100ஐ தாண்டியுள்ளது.

“மகாராஷ்டிராவிலிருந்து விநியோகிக்கப்பட்டு வரும் தக்காளியின் அளவு விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது டெல்லியில் விலையைக் கட்டுப்படுத்த உதவும். டெல்லி மற்றும் மும்பையில் ஒரு கிலோ ரூ.65 என்ற மானிய விலையில் தக்காளியை அரசு தொடர்ந்து விற்பனை செய்யும்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்