ஒடிசா: விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது

பாலேஸ்வர்: இந்தியாவின் ஆக மோசமானதொரு ரயில் விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் பயணிகள், சரக்கு ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

சமிக்ஞைத் தொழில்நுட்பக் கோளாறு மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட அவ்விபத்து நிகழ்ந்தது.

முதலில் 288 பேர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒடிசா மாநில அரசு அவ்வெண்ணிக்கையை 275ஆகக் குறைத்து அறிவித்தது.

காயமடைந்த 1,175 பேரில் இன்னும் 382 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவ்விபத்து நிகழ்ந்தது.

இந்நிலையில், நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று, விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்திற்குப் பிறகு, முதலாவதாக அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

சேதமடைந்த தண்டவாளங்கள் அனைத்தும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டனவா என்ற விவரம் தெரியவில்லை. 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!