தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இருவர் மரணம்: கேரளாவில் நிபா கிருமித்தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம்

2 mins read
15847919-81de-4862-92f7-c47dfffc6c08
நிபா தொற்றால் மாண்டவர்களின் பகுதியில் வசிப்பவர்கள் முகக்​கவசம், சமூக இடைவெளியைக் கடைப்​பிடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. - படம்: ஊடகம்

திருவனந்தபுரம்: நிபா கிருமித்தொற்றுக்கு இருவர் பலியானதைத் தொடர்ந்து கேரளாவின் சில பகுதிகளில் உச்சக்கட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

நிபா கிருமி மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்​கைகளை அந்த மாநில அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

கேரளாவில் ஆண்​டு​தோறும் கோழிக்​கோடு, பாலக்​காடு, மலப்​புரம் உள்​ளிட்ட இடங்​களில் தொடர்ச்​சி​யாக நிபா கிருமிப் பாதிப்பு இருந்து வரு​கிறது.

பாலக்​காடு மாவட்​டம் மன்​னார்​காடு அருகே குமரமபுத்​தூர் பகு​தியைச் சேர்ந்த 57 வயது ஆடவர் ஒரு​வர் கடந்த சில நாள்களாக தீவிர காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டிருந்​தார்.

தமது பகு​தி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவருக்குக் காய்ச்​சல் குண​மாக​வில்​லை.

அவரது உடல்​நிலை மிக​வும் மோச​மானதையொட்டி மஞ்​சேரி​யில் உள்ள அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்து அவரது உடலின் திரவ மாதிரி​களை சேகரித்துப் பரிசோ​தித்​த​தில் நிபா கிருமி பாதிப்பால் அவர் இறந்​தது தெரிய​வந்​தது.

சில நாள்​களுக்கு முன்பு நிபா கிருமியால் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். தற்போது நிபா மரண எண்ணிக்கை இரண்டாகி உள்ளது.

இதையடுத்து, மாநில சுகா​தா​ரத்​துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்​கைகளை மலப்​புரம், பாலக்​காடு, பெரிந்​தல்​மன்​னா, கோழிக்​கோடு பகு​தி​களில் தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. இத்​தகவலை சுகா​தா​ர அமைச்​சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்​துள்​ளார்.

முதற்​கட்​ட​மாக, நிபா கிருமி பாதித்து இறந்த ஆடவரின் வீட்டைச் சுற்றி மூன்று கிலோமீட்​டர் சுற்றளவு கட்​டுப்​படுத்​தப்​பட்ட பகு​தி​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதனால் அங்​குள்ள பகு​திக்​குள் வெளியில் இருந்து நபர்​கள் வரவும் அங்​குள்ள மக்​கள் வெளியே செல்​ல​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் முகக்​கவசம், சமூக இடைவெளியைக் கடைப்​பிடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அடுத்தக்கட்டமாக, உயிரிழந்த இருவருடனும் கிருமித்தொற்று நோயாளிகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்த 609 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களிடம் கிருமிப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்