தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் சுட்டுக் கொலை

1 mins read
840f42c1-a42a-425f-8825-0eaf688e8b22
என்கவுன்டரில் கொல்லப்பட்ட  ரவீந்​திரா, அருண். - படம்: ஊடகம்

பரேலி: இந்தித் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை திஷா பதானி வீட்​டின் மீது துப்​பாக்கிச்சூடு நடத்​திய இரு​வர் என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் உள்ளது நடிகை திஷா பதானிவீடு. கடந்த 12ஆம் தேதி மர்ம நபர்​கள் இரு​வர் இந்த வீட்டின் மீது துப்​பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்​தினர். இதில் யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை என்றாலும் பெரும் பரபரப்பு நிலவியது.

துப்​பாக்கிச் சூடு நடத்​தி​ய​வர்​கள் கோல்டி பிரார், ரோஹித் கோதாரா கும்​பலைச் சேர்ந்த ரவீந்​திரா, அருண் எனத் தெரிய​வந்​தது.

அண்மையில் ஆன்மிகத் தலை​வர்​கள் குறித்து நடிகை திஷா பதானி விமர்​சித்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாகச் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

இந்​நிலை​யில், துப்​பாக்கிச் சூடு நடத்​திய ரவீந்​திரா, அருண் ஆகிய இருவரும் காசி​யா​பாத் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த​போது அவர்​களை உத்தரப் பிரதேச மாநில, அதிரடிப்​படை, டெல்லி காவலர்கள் சுற்றி வளைத்​தனர்.

அப்​போது நடை​பெற்ற துப்​பாக்கிச் சூட்​டில் இரு​வரும் படு​கா​யம் அடைந்​தனர். மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் இரு​வரும் இறந்​தனர் எனக் காவல்துறையினர் தெரி​வித்​தனர்​.

குறிப்புச் சொற்கள்