ஐஃபோனுக்குப் பணமில்லை; விநியோக ஊழியரைக் கொன்று எரித்த ஆடவர்

பெங்களூரு: இணையம் வழியாக வாங்கிய ஐஃபோனுக்கான தொகையைச் செலுத்த பணமில்லாததால், அதனைக் கொண்டுவந்த விநியோக ஊழியரையே கொலை செய்த சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் தத், 20. அவர் ‘இ-கார்ட்’ இணையத்தளம் வழியாக ஐஃபோன் ஒன்றுக்குப் பணிப்பு (ஆர்டர்) செய்திருந்தார்.

இதனையடுத்து, இம்மாதம் 7ஆம் தேதி அவரது வீட்டிற்கு ஐஃபோனை விநியோகிக்கச் சென்றார் ஹேமந்த் நாயக், 23, என்ற ஆடவர்.

ஐஃபோனுக்கான ரூ.46,000 பணத்தைத் தரும்படி தத்திடம் நாயக் கேட்டுள்ளார். கையில் பணமில்லாத தத், நாயக்கைக் கத்தியால் குத்திக்கொன்றார்.

பின்னர் தன் வீட்டிலேயே நாயக்கின் உடலை வைத்திருந்த தத், நான்கு நாள்களுக்குப் பிறகு உடலைச் சாக்கு மூட்டையில் எடுத்துச் சென்று, அருகிலிருந்த ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் எரித்துவிட்டார்.

எரிந்த நிலையில் சடலம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறை விசாரணையை முடுக்கிவிட, ஹேமந்த் தத்தின் குற்றச்செயல் அம்பலமானது.

நாயக்கின் சடலத்தைத் தனது மோட்டார்சைக்கிளில் வைத்து தத் எடுத்துச் சென்றது கண்காணிப்புப் படக்கருவியில் பதிவானது. அக்காணொளியின் துணையுடன் ஹேமந்த் தத்தைக் காவல்துறை கைதுசெய்தது.
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!