உத்தரப் பிரதேசத்தில் 48 குற்றவாளிகள் கொன்று ஒழிப்பு; எட்டு ஆண்டுகளில் அதிகம்

2 mins read
abf24085-202d-4edb-b475-5a0f4abb1b4a
கடந்த ஆண்டு காவல்துறை நடத்திய என்கவுன்டர் நடவடிக்கைகளில் 3,153 குற்றவாளிகள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்தியா டிவி நியூஸ்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு 2,739 முறை என்கவுன்டர் என்னும் குற்ற முறியடிப்பு நடவடிக்கையைக் காவல்துறை மேற்கொண்டதாகவும் அவற்றில் 48 முக்கியக் குற்றவாளிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்​தி​யா​வில் குற்​றச்​செயல்​கள் அதி​கம் நடை​பெறும் மாநிலங்​களில் உத்தரப் பிரதேசம் முக்​கிய இடத்​தைப் பிடித்​திருப்பதையே இது உணர்த்துவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலை​மையி​லான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, என்கவுன்டர் நடவடிக்கை மூலம் குற்​றங்​களின் எண்​ணிக்கை குறைந்துள்​ள​தாகக் கருதப்​படு​கிறது.

அது தொடர்பாக மாநிலக் காவல் துறை இயக்​குநர் ராஜீவ் கிருஷ்ணா செய்​தி​யாளர்​களிடம் பேசினார். அவர் கூறுகையில், “உ.த்தரப் பிரதேசத்தில் 2025ஆம் ஆண்​டில் மட்​டும் 2,739 என்​க​வுன்டர்​களை காவல்துறை நடத்தி உள்​ளது. இவை அனைத்​தும் சட்​டத்​துக்கு உட்​பட்டு நடத்​தப்​பட்​டன. அந்த நடவடிக்கைகளின்போது 3,153 குற்​ற​வாளி​கள் காயமடைந்​தனர். ஒரு காவலர் வீரமரணம் அடைந்​தார்.

“மாநிலம் முழுவதும் 48 முக்​கியக் குற்​ற​வாளி​கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பின்னர், 2018 முதல் எட்டு ஆண்​டு​களு​டன் ஒப்பிடுகையில் இதுவே அதிக எண்​ணிக்கை ஆகும்.

“கடந்த 2017 மார்ச் 20ஆம் தேதி தொடங்கி 2025 டிசம்​பர் 29ஆம் தேதி வரை மொத்​தம் 266 குற்ற​வாளி​கள் என்கவுன்டர்களில் கொல்​லப்​பட்​டனர்.

2018ஆம் ஆண்டு 41 பேரும், 2019ல் 34 பேரும், 2020 மற்​றும் 2021ல் தலா 26 குற்றவாளிகளும் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.

“2025ஆம் ஆண்டு சட்​ட​விரோத மத மாற்​றம் தொடர்பாக 475 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 855 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

“பசு கடத்​தல் மற்​றும் பசுவதைக்கு எதி​ராக 1,197 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 3,128 பேர் கைது செய்​யப்​பட்​டனர். குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின்கீழ் 1,886 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்​பட்​டு, ரூ.7.38 கோடி மதிப்​புள்ள சொத்​துகள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

“திருட்​டு, கொள்ளை மற்​றும் வழிப்​பறி வழக்​கு​களில் 8,543 இருசக்கர வாக​னங்​கள், 911 நான்கு சக்கர வாக​னங்​களைக் காவல்துறை மீட்​டுள்​ளது,” என்று ராஜீவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்