உத்தரப் பிரதேச கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

1 mins read
52b5784f-1411-4228-9d96-92de8a924f3f
உத்தரப் பிரதேச மாநில முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத். - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்​ளி, கல்​லூரி​களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலை பாடு​வது கட்​டாய​மாக்​கப்​படும் என்று அந்த மாநிலத்தின் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அறி​வித்​துள்​ளார்.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவருமான சர்​தார் வல்​லபாய் படேலின் 150ஆவது பிறந்த நாள் கொண்​டாட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக உத்தரப் பிரதேசத்தின் கோரக்​பூர் நகரில் தேசிய ஒற்​றுமை தின பேரணி நடை​பெற்​றது.

அந்த நிகழ்வில் பங்கேற்ற மாநில முதல்​வர் ஆதித்​ய​நாத் சிறப்புரை நிகழ்த்தினார்.

“சர்​தார் வல்​லபாய் படேல், நமது விவாதங்​களின் ஒரு பகு​தி​யாக மாற வேண்​டும். மாநிலம் முழு​வதும் உள்ள பள்​ளி, கல்​லூரி​கள் உள்​ளிட்ட கல்வி நிலையங்​களில் ‘வந்தே மாதரம்’ தேசிய பாடல் பாடு​வது கட்​டாய​மாக்​கப்​படும். இதன்​மூலம் உத்தரப் பிரதேசத்தின் ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் பாரத மாதா மற்​றும் மாத்​ருபூமி மீதான மரி​யாதை உணர்வு அதி​கரிக்​கும்.

“தேசிய ஒற்​றுமை மற்​றும் ஒரு​மைப்​பாட்டை பலவீனப்​படுத்​தும் காரணி​களை நாம் அடை​யாளம் காணவேண்​டும். எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் ஒரு​மைப்​பாட்​டுக்கு சவால் விடும் எவரும் உரு​வா​காத வகை​யில் அவர்​களை திறம்பட எதிர்​கொள்ள வேண்​டும்,” என்று ஆதித்யநாத் பேசினார்.

குறிப்புச் சொற்கள்