75 விழுக்காடு சொத்துகளை மக்களுக்கு அர்ப்பணிக்கும் ‘வேதாந்தா’ நிறுவனர்

1 mins read
8c2d8a03-3804-455d-95f1-5e3f74485796
அனில் அகர்வாலுடன் அவரது மூத்த மகன் அக்​னிவேஷ் அகர்​வால். - படம்: இந்து தமிழ் திசை

மும்பை: தமிழகத்​தில் பிரபல ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நடத்திவரு​ம் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், தமது வருமானத்தில் 75 விழுகாட்டுக்குமேல் சமூகத்​துக்குச் செலவிடப் போவ​தாக அறி​வித்​துள்​ளார்.

அவரது மூத்த மகனான 49 வயது அக்னிவேஷ் அகர்வால், அமெரிக்​கா​வில் பனிச்​சறுக்கு விளை​யாட்​டில் ஈடு​பட்​டிருந்​த​போது விபத்​தில் சிக்கி படு​கா​யம் அடைந்​தார்.

நியூ​யார்க் மருத்துவ​மனை​யில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மாரடைப்பால் ஜனவரி 7ஆம் தேதி உயிரிழந்தார்.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அனில் அகர்​வால், “இன்று எனது வாழ்க்​கை​யின் மிக இருண்ட நாள். எனது அன்​புக்​குரிய மகன் அக்​னிவேசை இழந்துவிட்டேன்.

“சொல்லொண்ணா துயரத்தில் நான் இருக்கிறேன். தனது குழந்​தைக்கு விடை கொடுக்​கும் பெற்​றோரின் வலியை விவரிக்க வார்த்​தைகள் இல்​லை,” என்றார்.

மேலும், “நாங்​கள் சம்​பா​திப்​ப​தில் 75 விழுக்காட்டிற்கு மேல் சமூகத்​திற்​குத் திருப்​பிக் கொடுப்​பேன் என்று நான் எனது மகனிடம் உறுதியளித்​திருந்​தேன்.

“இன்​று, அந்த வாக்​குறுதியை நிறைவேற்ற நான் உறுதி எடுத்துள்ளேன்,” எனத் தமது பதிவில் அனில் அகர்வால் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அக்னிவேஷ் அகர்வாலின் அகால மரணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமூகப் பணிக்காக, தனது சொத்தில் 75 விழுக்காட்டுக்குமேல் செலவிடப்போவதாக அறிவித்துள்ள அனில் அகர்வாலின் ‘வேதாந்தா’ குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 2.43 லட்சம் கோடி.

குறிப்புச் சொற்கள்