கரடியைத் துரத்திய புலி! சிலிர்க்க வைக்கும் காணொளி!

பிலிபிட் (உத்தரப் பிரதேசம்): புலியிடமிருந்து தன்னுயிரைக் காத்துக்கொள்ள கரடி ஒன்று தப்பியோடும் காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பிலிபிட் காட்டுயிர்ப் பாதுகாப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

காட்டுயிர்ப் புகைப்படக் கலைஞர் சித்தார்த் சிங் பதிவுசெய்த இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே தமது எக்ஸ் (முன்னர் டுவிட்டர்) ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், புலியொன்று கரடியை விரட்டுவதும் சுற்றுப்பயணிகள் தங்கள் வாகனங்களில் இருந்தபடி அச்சத்துடன் அதனைக் காண்பதும் பதிவாகியுள்ளது.

“காடுகள் ஒருபோதும் நமக்கு வியப்பூட்டுவதை நிறுத்துவதில்லை,” என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் ரமேஷ் பாண்டே.

அவ்வகையில், பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இக்காணொளியைக் கண்டு, தங்கள் வியப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.

அவர்களில் ஒருவர், “உண்மையான ‘ஜங்கிள் புக்’ இங்கேதான் இருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!