வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்லாத கணவனைக் கொலைசெய்த ரேணுகா

ஒரே குத்தில் காதல் கணவரைச் சாய்த்தார்

புதுடெல்லி: விடுமுறைக்கு வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்ல மறுத்த கணவனை மனைவி முகத்தில் குத்திக் கொலைசெய்தார்.

இச்சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்தது.

நிகில் கண்ணா, 36, என்ற அந்த ஆடவர் கட்டுமானத் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அவர் ரேணுகா என்ற பெண்ணைக் காதலித்து, ஆறாண்டுகளுக்குமுன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட தன்னை துபாய்க்கு அழைத்துச் செல்லும்படி நிகிலிடம் ரேணுகா கூறினார். அதற்கு நிகில் உடன்படவில்லை. திருமண நாள் போன்ற மற்ற முக்கிய நாள்களின்போதும் தனக்கு விலையுயர்ந்த பரிசுப்பொருள்கள் வாங்கித் தரவில்லை என்று நிகிலிடம் ரேணுகா சண்டைபோட்டார். அத்துடன், தன் உறவினர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக டெல்லி செல்ல ரேணுகா விரும்பினார். அதற்கும் கணவர் நிகில் சரியான பதில் கூறாததால் ரேணுகா கோபத்தில் இருந்தார்,” என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் விளக்கினார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இருவர்க்கும் இடையே சண்டை மூண்டது. அப்போது, நிகிலின் மூக்கில் ரேணுகா குத்தினார். குத்து வலுவாக இருந்ததால் நிகிலின் மூக்கும் சில பற்களும் உடைந்தன. இதனால் அதிக அளவில் ரத்தம் கொட்ட, அவ்விடத்திலேயே நிகில் மயங்கி விழுந்தார்.

விசாரணைக்குப்பின் ரேணுகாவைக் காவல்துறை கைதுசெய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!