பேருந்துப் பயணத்தின்போது அத்துமீறிய ஆடவரை நையப்புடைத்த வீரமங்கை

கேலி செய்தல், பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் அன்றாடம் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களாக இருந்தாலும் சில வேளைகளில் அவர்கள் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை.

அத்தகையதொரு சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மாண்டியா நகரில் உள்ளூர்ப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணை ஆடவர் ஒருவர் கேலிசெய்ததோடு, அவரைத் தகாத முறையில் தொடவும் முயன்றார். அப்பெண் பலமுறை எச்சரித்தும் அந்த ஆடவர் தமது செய்கையை நிறுத்தவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒருகட்டத்தில் பொங்கி எழுந்து, அந்த ஆடவரது சட்டையின் கழுத்துப்பட்டியைப் பிடித்தபடி,  கன்னத்தில் பலமுறை அறைந்து, அவருக்குப் பாடம் புகட்டினார்.

இதில் வேதனை என்னவெனில், பேருந்தில் மேலும் சிலர் இருந்தும், ஒருவரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான்.

ஆயினும், இச்சம்பவத்தை ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட, அப்பெண்ணின் துணிச்சலை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!