இந்திய மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி

இந்திய மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி

2 mins read
ad7c78fa-bf56-4b63-a0d2-358b2d6b75c7
மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடி. - படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவின் மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீட்டு மசோ​தா, வாக்​கெடுப்​பில் போதிய ஆதரவு கிடைக்​காத​தால் தோல்வி அடைந்​தது.

கடந்த 2023ஆம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. அதன்​படி, நாடாளு​மன்​றம் மற்றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 விழுக்காடு தொகுதிகள் ஒதுக்​கப்பட வேண்​டும்.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

அதற்காக, தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) மக்களவையில் தாக்கல் செய்தது.

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அம்சம் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​டி கட்சி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணிக் கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் மக்களவையில் வியாழக்கிழமை நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. வெள்ளிக்கிழமை காலை விவாதம் தொடர்ந்​தது.

பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று விளக்கம் அளித்த பின்னர் மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

மொத்​தம் 528 எம்​பிக்​கள் பங்கேற்றதில், மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும் எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மூன்​றில் இரு பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​பிக்களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

போதுமான ஆதரவைப் பெற முடியாததால் மகளிர் இடஒதுக்​கீட்டு மசோதா தோல்வி அடைந்​தது. மகளிர் இடஒதுக்​கீட்டு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற இரு மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

குறிப்புச் சொற்கள்