கடற்படைத் தளம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இளையர் கைது

கடற்படைத் தளம் குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இளையர் கைது

2 mins read
1dcbe1d9-3de3-4fd5-9612-4ec632d8ed3f
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலிப் இஸ்​லாம், 21. - படம்: கேரளக் காவல்துறை

பெங்களூரு: கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘கொச்​சின் ஷிப்யார்ட்’ கப்​பல் கட்​டும் நிறு​வனத்​தின் கிளை அலுவலகம் கர்​நாட​கா​வில் உள்ள உடுப்பி மல்பே கடற்​கரை​யில் செயல்​பட்டு வரு​கிறது.

அங்கு இந்திய நாட்​டின் கடற்​படைக்குச் சொந்​த​மான கப்​பல் கட்​டும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அந்தக் கப்​பல் கட்​டும் தளம் குறித்த தகவல்​கள், ​படங்​கள் மற்​றும் காணொளிகள் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத அமைப்​புக்கு அனுப்​பப்​படு​வ​தாக கடந்த ஆண்டு நவம்​பரில் தகவல் வெளி​யானது.

இதுகுறித்து, ‘கொச்​சின் ஷிப்யார்ட்’ நிறு​வனம் அளித்த புகாரின்​பேரில் உடுப்பி காவல்துறையினர் தீவிர விசா​ரணை மேற்​கொண்​டனர்.

விசாரணையில், நிறு​வனத்​தில் ஒப்​பந்தப் பணி​யாள​ராக பணி​யாற்​றும் சிலர் உளவாளி​களாகச் செயல்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​களின் கைப்பேசி எண்​கள், சமூக ஊடகக் கணக்குகளைக் காவல்துறையினர் ஆய்வுசெய்​தனர்.

அதில் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் கடந்த நவம்​பரில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரோஹித், 23, சான்ட்ரி, 26, என்ற இரு​வரைக் கைதுசெய்​தனர்.

விசா​ரணை​யில், குஜ​ராத்தை சேர்ந்த ஹிரேந்​திர குமார் சந்தேக நபர்களுக்கு ‘சிம்’ அட்டை வாங்கி கொடுத்து போலி ‘வாட்ஸ்அப்’ கணக்​கு​களை உரு​வாக்கி கொடுத்​தது அம்பலமானது.

அதையடுத்து, ஹிரேந்​திர குமாரை அதிகாரிகள் கைதுசெய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை​க்குப் பின் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலிப் இஸ்​லாம், 21, என்ற இளையர் கேரளா​வில் உள்ள இடுக்​கி​யில் கைதுசெய்​யப்பட்டார்.

அலிப் இஸ்​லாம் மேற்கு வங்க முகவரி​யில் அடை​யாள அட்டை வைத்​துள்ள போதும், அவர் பங்ளாதே‌‌ஷைச் சேர்ந்​தவ​ராக இருக்​கலாம் என காவல்துறையினர் சந்​தேகிக்​கின்​றனர். எனவே அவரை ஏழு நாள்கள் காவலில்​ எடுத்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

குறிப்புச் சொற்கள்