தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கவிதைக்கான மூன்று அடிப்படைகள்

3 mins read
8d644b44-705f-4d6f-842c-8fb6efb0caf1
கவிதை பொருட்செறிவோடு இருக்க வேண்டும் என்பதும் அதனை முத்தாய்ப்பாக முடிக்க வேண்டும் என்பதும் கவிஞர் மகுடேசுவரனின் அறிவுரை. படம்: கவிமாலை -
multi-img1 of 2

சிவகுமார்

கவிதை என்­பது மொழி­தான். ஆனாலும், அது மாபெ­ரும் அக வெளிப்­பாடு.

இயல்­பான சொற்­றொ­டர் மேம்­பட்­டி­ருப்­பது கவிதை. ஒரு­வ­ரது கருத்தை, பார்­வையை மிகச் சிறந்த வடி­வில் வெளிப்­ப­டுத்­து­வது கவிதை. அது காலங்­கா­ல­மாக நிற்­கின்ற தொட­ரா­க­வும் சமூ­கத்தை அசைத்­துப் பார்க்­கின்ற தொட­ரா­க­வும் விளங்­கு­கின்­றது.

கவி­மாலை அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருந்த 'கவி­தை­யும் இலக்­க­ண­மும்' என்ற பயி­ல­ரங்­கில் கவி­ஞர் மகு­டே­சு­வ­ரன் உதிர்த்த சொற்­களே இவை.

"ஒன்றை வேறொரு வடி­வத்­தில் சொல்­வது கவிதை. அது மூன்று அடிப்­படை இயல்­பு­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

"முத­லா­வ­தாக, மன­வி­யப்பு. கவி­ஞன் மாசற்ற கண்­ணோடு உல­கைக் காண வேண்­டும்; எத­னை­யும் வியந்­து­நோக்­கு­ப­வ­னாக இருத்­தல் வேண்­டும்; அவ்­வி­யப்­பைத் தொட­ராக எழுத வேண்­டும்.

"எப்­பொ­ழு­தும் கேள்­வி­களோடு இருக்க வேண்டும். விடை­யி­ருந்­தால் அவன் கவி­ஞன் இல்லை. தனக்­குத் தெரி­யா­த­து­போல் கேட்க வேண்­டும். கேள்வி­கள் கடும் விளை­வு­களை ஏற்­படுத்த வல்­லவை.

"இறு­தி­யாக, கவித்­து­வ­மான தீர்­வும் பார்­வை­யும் கொண்டிருக்க வேண்­டும். இம்­மூன்று அடிப்­ப­டை­க­ளோடு எந்­த­வொரு வாக்­கி­யத்­தை­யும் பொருட்­செ­றி­வோடு எழுத வேண்­டும். கவி­தையை முத்­தாய்ப்­பாக முடிக்க வேண்­டும்," என்று கவி­ஞர் மகுடேசுவரன் வலி­யு­றுத்­து­கி­றார்.

ஒரு சொல்லை ஒற்­றைச் சொல்­லாக நிறுத்­தி­வி­டாது, ஒன்­றை­யொன்று உவ­மைப்­ப­டுத்தி, உரு­வ­கப்­ப­டுத்தி விரித்து விரித்து எழுத வேண்­டும் என்­பது கவி­ஞர் மகு­டே­சு­வ­ர­னின் அறி­வுரை.

முக்­கி­ய­மாக, கவி­ஞன் இலக்­கணப் புல­மை­யு­டை­ய­வனாக, மொழி­யில் தேர்ச்சி பெற்­ற­வ­னாக, அதனை மிகச் சிறப்­பா­கக் கையா­ளத் தெரிந்­த­வ­னாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பி­டு­கி­றார்.

"புதிது புதி­தாய்ப் பெயர்ச்­சொற்­க­ளை­யும் வினைச்­சொற்­க­ளை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும். அடுத்து எந்­தச் சொல்­லைப் பயன்­ப­டுத்­து­வார் என்று பிற­ரால் கண்­டு­பி­டிக்க முடி­யா­த­படி இருக்க வேண்­டும். சொற்­கள் வலி­மை­யா­கத் தாக்­கும். இலக்­கணப் பிழை­யின்றி செம்­மை­யான வடி­வத்­தில் கவிதை அமைய வேண்­டும்," என்று கவி­ஞர் வலி­யு­றுத்­து­கி­றார்.

பின்­னர் தமிழ் இலக்­க­ணம் குறித்து, பங்­கேற்­பா­ளர்­க­ளின் பல ஐயங்­க­ளை­யும் அவர் தீர்த்­து­வைத்­தார்.

சிராங்­கூன் சாலை, ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோவி­லுக்கு எதி­ரி­லுள்ள சந்­திர மகா­லில் இம்­மா­தம் 1ஆம் தேதி திங்­கட்­கிழமை இடம்­பெற்ற இப்­ப­யி­ல­ரங்­கில் ஐம்­ப­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்து­கொண்­ட­னர்.

"கவி­தை­யைப் பற்­றி­யும் இலக்­க­ணத்­தைப் பற்­றி­யும் ஒரு புரி­தலை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற நோக்­கத்­தில் இப்­ப­யி­ல­ரங்கை ஏற்­பாடு செய்­தி­ருந்­தோம். அவ்­வ­கை­யில், மிக எளி­மை­யாக எல்­லா­ருக்­கும் புரி­யும் வகை­யில் கவி­ஞர் இலக்­க­ணத்­தைக் கற்­றுத் தந்­தார்," என்று கவி­மாலை அமைப்­பின் தலை­வர் கவி­ஞர் இன்பா கூறி­னார்.

கவிதை எழு­தும் பல­ரும் மொழி­யைப் பற்­றிய தெளி­வான புரி­தல் இல்­லா­ம­லேயே எழுதி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார் பங்­கேற்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு கேத்­தி­ர­பா­லன், 40.

"ஒரு கவிதை என்­றால் எப்­படி இருக்க வேண்­டும், அதன் அமைப்பு எவ்­வாறு இருக்க வேண்­டும் என்­பன குறித்து கவி­ஞர் கற்­றுத் தந்­தார். மொழி­ய­றிவை வளர்த்­துக்­கொண்டு கவிதை எழுத வேண்­டும் என்­றார். நாம் ஆயி­ரம் கவி­தை­களை எழு­தி­னா­லும் அவற்­றுள் பத்­தே­னும் அடுத்­த­டுத்த தலை­மு­றை­கள் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யாக விளங்க வேண்­டும். சந்­திப் பிழை­கள், பகு­பத உறுப்­பி­லக்­க­ணம் போன்ற இலக்­க­ணம் சார்ந்த பல­வற்­றை­யும் கற்­றுக்­கொண்­டோம்," என்று மென்­பொ­ருள்­துறை­யில் பணி­யாற்­றும் திரு கேத்­தி­ர­பா­லன் சொன்­னார்.

அவ­ரைப் போலவே மென்­பொருள்­து­றை­யில் பணி­யாற்­றி­வரும் திரு சர­வ­ண­குமார், 41, கடந்த ஓராண்­டு­கா­ல­மா­கப் புதுக்­க­விதை எழுதி வரு­கி­றார்.

"கவிதை எழு­தும்­போது ஒற்­றுப்­பிழை தவிர்க்­க­வும் பெயர்ச்­சொல், வினைச்­சொல் போன்­றவை குறித்து அறிந்­து­கொள்­ளும் நோக்­கத்­தில்­தான் நான் இங்கு வந்­தேன். இலக்­க­ணம் பெருங்­க­ட­லா­யி­னும் இந்த இரண்டு மணி நேரத்­தில் தம்­மால் முடிந்த அளவு அவர் விளக்­கி­னார்," என்­றார் திரு சர­வ­ண­குமார்.

மனத்­தில் நிற்­கும்­ப­டி­யான கவி­தை­களை வரைய சொல் தேர்வு இன்­றி­ய­மை­யா­தது என்று கவி­ஞர் வலி­யு­றுத்­தி­ய­தா­கக் குறிப்­பிட்­டார் தமி­ழா­சி­ரியை பா. கங்கா.

"இலக்­க­ணத்தை நன்கு அறிந்து­கொண்டு அதன்­பின்­னர் கவி­தையோ கட்­டு­ரையோ எழு­தும்­போது மொழிப் பிழை­கள் ஏற்­பட வாய்ப்­பில்லை. புதிய சொற்­களை உரு­வாக்­கு­வது நம் ஒவ்­வொ­ரு­வரின் கடமை என்­றும் அதற்கு மொழி குறித்த ஆழ்ந்த அறிவு வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்," என்று திரு­வாட்டி கங்கா கூறி­னார்.

நிகழ்­வில் கலந்­து­ரை­யா­ட­லும் இடம்­பெற்­றது தமக்­குப் பிடித்­து இ­ருந்­தது என்­றும் அது இலக்­கணம் சார்ந்த பல ஐயங்­க­ளைக் களைய உத­வி­யது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"எல்லா நண்­பர்­களும் தங்­களு­டைய மனத்­தில் நெடு­நா­ளாக அரித்­துக்­கொண்­டி­ருந்த மொழி ஐயங்­க­ளைக் கேட்­டார்­கள். எல்­லா­ருக்­கும் விடை­கூற ஒரு வாய்ப்­பாக இருந்­தது," என்­றார் கவி­ஞர் மகு­டே­சு­வ­ரன்.

ஒவ்­வொ­ரு­வ­ரும் மொழி மக்­க­ளாக, மொழி­யின் தலை­சி­றந்த போர்­வீ­ரர்­க­ளா­கத் திகழ்ந்து, இனி­ய­தொரு மொழிப் பங்­க­ளிப்பை ஆற்­று­வர் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பய­னுள்ள இப்­ப­யி­ல­ரங்கு இன்­னும் சற்று நேரம் நீடித்­தி­ருக்­கக்­கூ­டாதா என்று பங்­கேற்­பா­ளர்­கள் எண்­ணும்­ப­டி­யாகக் கவி­தைப் பயி­ல­ரங்கு அமைந்­தி­ருந்­தது. இது­போன்ற பயி­ல­ரங்­கு­க­ளைத் தொடர்ந்து ஏற்­பாடு செய்­வது தங்­க­ளைப் போன்­றோ­ருக்­குப் பேரு­த­வி­யாக இருக்­கும் என்­பது பங்­கேற்­பா­ளர்­க­ளின் கோரிக்கை.