சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்டோர் பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்படுவது தற் போது அதிகரித்துள்ளது. ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுள் முதலாவது இடத்தையும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களுள் இரண்டாம் இடத்தையும் இது பிடித்துள்ளது. இருப்பினும், 50 முதல் 69 வயதுக்குட்பட்டோரில் மூவரில் ஒருவரே பரிந்துரைக்கப்பட்ட இடைவெளிகளில் பெருங்குடல் புற்றுநோய் பரி சோதனைக்குச் செல்கின்றனர். "பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படக்கூடியதே. ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், துடிப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றின் மூலம் இந்நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
சீரான இடைவெளிகளில் உடற்பரிசோதனைகள் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவதுடன் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பாகவே அதற்கு உகந்த சிகிச்சை அளிக்கலாம்," என புற்றுநோய்ச் சங்கம் தெரிவித்தது. மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை 15வது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளில் ஒன்று 'எஃப்ஐடி' எனப்படும் 'ஃபேசல் இம்யூனோகெமிகல்' பரிசோத னைக்கான சிறிய சோதனைப் பெட்டி. அதை 50 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் சிங்கப்பூர் புற்றுநோய்ச் சங்கம் இலவசமாக வழங்குகிறது.
இந்தச் சோதனைப் பெட்டியைக் கொண்டு எளிதாக வீட்டிலேயே பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். இதற்கென்று உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்யத் தேவையில்லை. இந்த சோதனைப்பெட்டி மூலம் மலத்தில் ரத்தம் தென்படுகிறதா என்பதைக் கண் டறியலாம். மெடிசேவ் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'கொலொ னோஸ்கோப்பி' பரிசோதனையும் மேற்கொள்ளலாம். மேல் விவரங்களுக்கு www. singaporecancersociety.org.sg என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

