ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோமீட்டர் தூரம் வரை ஓடக் கூடிய மோட்டார்சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த ரிக்கார்டோ ஆஸ்வெடோ. தமது ஹோண்டா என்எக்ஸ் 200 ரக மோட்டார் சைக்கிளில் மாற்றங்களைச் செய்து இந்த புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் அவர். மோட்டார் சைக்கிளுடன் கார் மின்கலத்தை இணைத்துள்ளார் ஆஸ்வெடோ. மின்கலத்தில் இருந்து வெளியாகும் மின்சாரம் நீரில் உள்ள ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் 'எலெக்ட்ராலிசிஸ்' மூலம் பிரிக்கிறது. அதிக எண்ணிக்கையில் வெளியாகும் ஹைட்ரஜனின் உந்து சக்தியால் மோட்டார் சைக்கிள் வேகமாக முன்னோக்கிச் செல்கிறது. கரியமில வாயுவுக்குப் பதிலாக இது நீராவியையே உமிழ்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்தக் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தண்ணீரில் இயங்கும் மோட்டார்சைக்கிள்
1 mins read
-

