ஒன்பதாவது ஆண்டாக சிங்கப்பூர் இரவு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வாரமாக வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிராஸ் பசா, பூக்கிஸ் இடங்களில் இவ்விழா நடத்தப் பட்டது. 'கண்டுபிடிப்புகளும் புத்தாக்கமும்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் உள்ளூர், அனைத்துலகக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அதன் ஓர் அங்கமாக நெதர்லாந்து கலைஞர்கள் 'கற்பனை உலகம்' என்ற தலைப்பில் கற்பனை கதாபாத்திரங்கள், வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை அங்கு திரண்டிருந்த மக்கள் கண்முன் கொண்டு வந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
கண்களுக்கு விருந்தளித்த சிங்கப்பூர் இரவு விழா
1 mins read
-

