லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இளம் வயதிலேயே தாடி, மீசை கொண்டிருப்பதற்காக கின்னசில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர், 24, என்ற அந்தப் பெண் 'பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்கு முகம், உடலில் முடி முளைத்துள்ளது. சீக்கிய சமயத்தைச் சேர்ந்த அவருக்கு 11 வயதிலிருந்தே முடி வளரத் தொடங்கியது. சீக்கிய சமய நம்பிக்கையின்படி முடியை வெட்டாமல் அவர் வளர்த்து வருகிறார்.
"எனக்கு தாடி, மீசை வளர்ந்தாலும் நான் இப்போதும் பெண்மைத் தன்மையுடன்தான் உணர்கிறேன். எனக்குத் தாடி மீசை இருப்பதைப் பற்றி வருத்தம் எதுவும் இல்லை. எங்களது சம்பிரதாயத்தின்படி அதனை நான் விரும்புகிறேன். கடவுள் என்னை இப்படிப் படைத்ததற்காக நான் மகிழ்ச்சியே கொள்கிறேன். சில மர்ம நபர்கள் எனக்குக் கொலை மிரட்டல்கூட விடுத்துள்ளனர். தற்போது எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை," என்று உறுதியான மனதுடன் ஹர்னாம் கூறுகிறார். கின்னசில் இடம்பிடிக்க பலர் படாதபாடு பட்டாலும் தாடி, மீசைக்காக கின்னசில் இடம் பிடித்ததைச் சிறுமையாகக் கருதுகிறார் அவர்.
இளம் வயதில் தாடி, மீசை வளர்த்ததற்காக கின்னசில் இடம் பிடித்துள்ளார் ஹர்னாம் கவுர். படம்: இணையம்

