கவிஞர் மா.அன்பழகன் எழுதிய நாவல் அவருடைய 29வது நூல். அதன் அறிமுகவிழா இம்மாதம் 31ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 7.30 மணிக்குத் தொடங்கி 9 மணிக்கு நிறைவுறும். இந்நிகழ்ச்சி டெஸன்சன் சாலை சிவில் சர்விஸ் கிளப்பின் மூன்றாவது தளத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் இருமொழி முனைவரும் கவிஞரும் எழுத்தாளருமான ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கோயமுத்தூரிலிருந்து வருகை புரிந்து மா.அன்பழகனின் நூலாகிய 'காதல் இசைபட வாழ்தல்' எனும் நாவலை அறிமுகப்படுத்தி 'நாவலும் நம் வாழ்க் கையும்' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றள்ளார். மேலும் தகவலுக்கு 90053043 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.
நூல் அறிமுக விழாவில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேச்சு
1 mins read

