தங்கமீன் சந்திப்பில் மாணவர்களின் வீதி நாடகம்

தங்கமீன் சந்திப்பில் மாணவர்களின் வீதி நாடகம்

1 mins read

தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 55வது சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு, தோ பாயோ பொது நூலகத்தின் மூன்றாவது தளத்தில் நடைபெறவுள்ளது. தேசிய நூலக வாரியம், தேசியக் கலை மன்ற ஆதரவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில், இம்மாதச் சிறப்பு அங்கமாக உமறுப்புலவர்த் தமிழ்மொழி நிலைய மாணவர்கள் நடிக்கும் 'வீதி நாடகம்' நடைபெற இருக் கிறது. வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நாடகத்தில் 12 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். படித்ததில் பிடித்தது, நாடக பாணி கதை வாசிப்பு, கவிதை ரசனை, குறும்படம், கதை கவிதை விமர்சனம் உள்ளிட்ட பல அங்கங் களோடு நடைபெறும் இச்சந்திப்பிற் கான அனுமதி இலவசம். மேல் விவரம் வேண்டுவோர் 8186 5530 என்ற எண்ணில் அழைக்கலாம்.