நீண்டகாலமாக வலிநிவாரணி களை எடுத்துக்கொள்ளும் பெண் களின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித் திருக்கின்றனர். ஆஸ்பிரின், ஐபியூபுரோஃபென், அசிட்டோமினோஃபென் போன்ற வலிநிவாரணி மருந்துகளுக்கும் செவித்திறன் இழப்பிற்கும் உள்ள தொடர்பை அவர்கள் ஆராய்ந்தனர். 48 முதல் 73 வயதுக்குட்பட்ட அமெரிக்கப் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஐபியூபுரோஃபென் அல்லது அசிட் டோமினோஃபென் ஆகியவற்றை நீண்டகாலத்திற்கு, அதாவது குறைந்தது ஆறாண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வருவோரின் காது கேட்கும் திறன் பறிபோக அதிக அபாயமிருப்பதை ஆய்வா ளர்கள் கண்டறிந்தனர்.
பெண்களின் செவித்திறனைப் பாதிக்கவல்ல வலிநிவாரணிகள்
1 mins read

