வழக்கம் போல இந்த ஆண்டும், மார்கழி மாதத்தில் திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினர் பாவை விழாவை ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். சிங்கை ஓதுவார்களின் திரு வெம்பாவைக் கச்சேரியுடன் இவ் விழா சிராங்கூன் சாலை அருள் மிகு வீரமாகாளியம்மன் ஆலயத் திருமண மண்டபத்தில் நடை பெறும். இந்த விழா நாளை ஞாயிறு ஜனவரி 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மதிய உண வுடன் விழா இனிதே நிறைவு பெறும்.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக மதுரை பொற்கிழிக் கவிஞர் பேராசிரியர் திரு சொ. சொ. சொ. மீ. சுந்தரம் அவர்கள் 'உனக்கே அடைக்கலம்' என்னும் தலைப்பில் பேருரை ஆற்றுவார்கள். மேல் விவரங்களுக்கு 9827 7780 எனும் எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.