சிங்கப்பூரில் தமிழர்களின் பாரம்பரியத் தொழில்கள் நீடித்து வளர என்ன செய்யலாம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து லிஷாவின் தலைவர் திரு ராஜ்குமாரும் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு அருணாசலமும் நாளை மறுநாள் நடைபெறும் கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கேள்வி=பதில் அங்கமும் உண்டு. இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சி தேசிய நூலகக் கட்டடத்தின் 5வது மாடியில் உள்ள Imagination அறையில் காலை 10.30 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. இன்று பதிவுக்கு இறுதி நாள். http://www.trc.org.sg/suvadugal எனும் இணையப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.
பாரம்பரியத் தொழில்களின் சுவடுகள்
1 mins read

