19, சிலோன் ரோட்டில் அமைந்துள்ள செண்பக விநாயகர் ஆலயத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை பொங்கல் கொண்டாட்டமும் அதைத் தொடர்ந்து இரவு விருந்து மண்டலாபிஷேகம் பொத்தோங் பாசிர் அவென்யூ 2, ஸ்ரீ சிவ துர்க்கா ஆலயத்தின் மகா கும்பாபிஷேக மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, ஸ்ரீ விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, 10 மணிக்கு மகா பூர்ணாஹுதி, 10.30 மணிக்கு ஸ்ரீ சிவபெருமானுக்குச் சங்கு அபிஷேகம், 11 மணிக்குப் பக்தர்கள் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் குடம் எடுத்தல், தொடர்ந்து அபிஷேகம், 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும். இரவு 7 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீ சுந்தரவல்லி உடனுறை சோமநாதப்பெருமான் வெள்ளி ரதத்தில் சிங்கை நகர் வீதி உலா செல்வார்.
வெள்ளி ரதம் நிற்கும் இடங்கள்: 1. புளோக் 254, சிராங்கூன் சென்ட்ரல் டிரைவ், 2. புளோக் 469 கார் பேட்டை, அங் மோ கியோ அவென்யூ 10, ஸ்திரீட் 44 (சொங் பூன் உயர்நிலைப் பள்ளி எதிரே), 3. புளோக் 2, செயின்ட் ஜார்ஜஸ் சாலை. நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. மரீன் பரேட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வின் டோங் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள் கிறார். கோலம் போடுதல், பானை களை அழகுபடுத்துதல், நடனம், பொங்கல் வைத்தல் ஆகியவற் றுடன் கபடி, உறியடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளன. தேவாலயம், பள்ளிவாசல், சமூக நிலையங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களும் அக்கம்பக்கத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின் றனர். அத்துடன், 'நாராயணா ஹோம்'வாசிகளும் 'பொங்கல் கொண்டாட்டம் 2017' நிகழ்ச்சி யில் இணையவிருக்கின்றனர். அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு அழைக்கப் படுகின்றனர். அனுமதி இலவசம்.