'நாயன்மார்கள் கண்ட தமிழ்'

'நாயன்மார்கள் கண்ட தமிழ்'

1 mins read

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 64வது இலக்கியச் சோலை நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு எண் 101 பாலஸ்டியர் சாலை, சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது. இதில் 'நாயன்மார்கள் கண்ட தமிழ்' எனும் தலைப்பில் ரெத்தின சபாபதியும் 'ஆழ்வார்கள் போற்றிய தமிழ்' தலைப்பில் ஆமருவி தேவ நாதனும் சிறப்புரை ஆற்று கின்றனர். நிகழ்ச்சியில் சிறுவர்கள் படித்ததைப் பகிரும் அங்கம் மற்றும் கேட்டதைப் பகிரும் அங்கம் இரண்டிலும் கலந்து கொண்டு பேசுவார்கள். பங்கெடுக்கும் மாணவர்க ளுக்கு 'முஸ்தபா தமிழ் அறக் கட்டளை' மற்றும் தமிழ் புத்தக நிலைய உரிமையாளர் திரு முகம்மது முஸ்தபா வழங்கும் புத்தக பற்றுச்சீட்டு பரிசாக வழங் கப்படும். டாக்டர் என்.ஆர். கோ விந்தன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறும்.