தேசிய நூலக வாரியத்தின் "ஒரு நூலகரின் உலகம்" எனும் கண்காட்சியில் சிங்கப்பூரில் நாடக வளர்ச்சியை எடுத்துக்கூறும் நூல்கள் பற்றிய சிறப்புப் பேச்சு இடம்பெறும். தமிழ் நாடகங்கள் மட்டுமல்லாது ஆங்கிலம், சீன மொழி நாடகங்களின் வளர்ச்சி பற்றிய உரையும் இடம்பெறும். இன்று இரவு 7 மணிக்கு தேசிய நூலகக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் www.nlb.gov.sg எனும் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.
'நாடக வளர்ச்சி பற்றி பேச்சு'
1 mins read

