நான்கு மொழிகளில் தேசிய கவிதை விழா ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி நான்கு மொழிகளில் கவிதைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் கவிதைகளை ஆங்கில மொழி பெயர்ப்புடன் அனுப்ப வேண்டும் (தொகுப்பில் வெளியிட). எனினும் தமிழ்க் கவிதைகளின் அடிப்படையிலேயே கவிதைகள் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு பிரிவிலும் போட்டியில் வெற்றி பெறும் மூன்று கவிதைகளும் தேர்வு பெறும் கவிதைகளும் தேசிய கவிதை விழாவில் வாசிக்கப்படும். வெற்றி பெறுவோருக்கு புத்தகப் பரிசுடன் புத்தகப் பற்றுச்சீட்டுகளும் வழங்கப் படும். அத்துடன் தேர்வுபெறும் கவிதைகள் நான்குமொழி தொகுப் பிலும் இடம்பெறும்.
தேசிய கவிதை விழா கவிதைப் போட்டி
1 mins read

