'லெந்து' கால விரதங்கள்

'லெந்து' கால விரதங்கள்

1 mins read
68937952-dc0e-49bd-9316-9283b0559abc
-
multi-img1 of 2

ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு 'புனித வெள்ளி', 'ஈஸ்டர்' ஆகிய நாட்களும் முக்கியமான பண்டி கைகளாகும். கிறிஸ்துவாகிய இயேசு மரித்ததைப் 'புனித வெள்ளி' என்றும் அவரது உயிர்த்தெழுதலை 'ஈஸ்டர்' என்றும் கூறும் கிறிஸ் தவர்கள், ஆண்டுதோறும் இவற்றை நினைவுகூர நாற்பது நாட்கள் வரை உபவாசம் அல்லது நோன்பு இருப்பது வழக்கம். விரதம் இருப்பது என்றால் அசைவம் உண்ணாமல் இருப்பது அல்லது ஓரிரு வேளைகள் உணவு உட்கொள்ளாமல் இருப்பது என்று தான் பலரும் நினைப்பார்கள் என்ற யீசூன் கிறிஸ்தவ ஆலயத் தின் போதகர் அருட்திரு இஸ் ரவேல் செல்வம், 43, பிடித்தமான ஒன்றை அந்த நாற்பது நாட் களிலும் கைவிடுவதும் ஒருவித விரதம்தான் என்றார்.

'லெந்து' நாட்களின் போது, பிடித்தமான ஒன்றை கைவிடுவதும்கூட ஒருவித விரதம்தான் என்று கூறுகிறார் யீசூன் கிறிஸ்தவ ஆலயத்தின் போதகர் அருட்திரு இஸ்ரவேல் செல்வம். படங்கள்: திமத்தி டேவிட்<p>