‘தி சர்ச் ஆஃப் ஜீசஸ்’ கிறைஸ்ட் ஆஃப் லேட்டர் டே செயிண்டஸ்’ தேவாலயமும் ஜாமியா சிங்கப்பூர் இஸ்லாமியப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்வில் மலபார் தங்க & வைர நகைக்கடையினர் கலந்துகொண்டனர்.
மே 27ஆம் தேதி நடந்த இந்த இஃப்தார் விருந்து நிகழ் வில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 1,500 பேருக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது.
சமூக பொறுப்பு நடவடிக்கை யில் ஆர்வமாக பங்காற்றி வரும் மலபார் நகைக்கடை இந்நிகழ்வில் ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு 5,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.