சேலம் மாவட்டம் வாழப்பாடி அரங்கத்தில் சென்ற வாரம் தியாக ரமேஷின் 'தனிமைத்தவம்' கவிதைநூல் வெளியீடு கண்டது.
வாழப்பாடி இலக்கியப் பேரவை, உலகத் தமிழ்க் கழகம் இணைந்து விழா உலகத் தமிழ்க் கழகத்தின் தமிழ் எண் மாதாந்திர நாட்காட்டி வெளியீட்டையும் கவிதை நூல் வெளியீட்டையும் ஏற்பாடு செய்திருந்தன. வாழப்பாடி அரிமா சங்க பட்டையத்தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கவிதை நூலையும் உலகத் தமிழ்க் கழக நாள்காட்டியையும் வெளியிட்டுப் பேசிய புதுச்சேரி தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலைய நிகழ்ச்சித் தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி. புத்தக வாசிப்பு குறையவில்லை, நவீன கருவிகள் வாயிலாக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றார். பலரும் கவிதை நூல் குறித்து உரையாற்றினர். தியாக ரமேஷ் ஏற்புரை வழங்கினார்.

